Home LOCAL NEWS நீதிமன்றினுள் துப்பாக்கி சூடு – இராணுவ கொமோண்டோ அணியின் முன்னாள் சிப்பாய் கைது

நீதிமன்றினுள் துப்பாக்கி சூடு – இராணுவ கொமோண்டோ அணியின் முன்னாள் சிப்பாய் கைது

173
0

புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து கனேமுல்ல சஞ்சீவவை சுட்டு படுகொலை செய்த பிரதான சந்தேகநபர், புத்தளம் – பாலாவி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேன் ஒன்றில் தப்பிச் செல்லும் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், இராணுவ கமாண்டோ படையணியின் முன்னாள் சிப்பாய் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொலை செய்த துப்பாக்கிதாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here