Home இலங்கை செய்திகள் தாயி இறந்த சில மணித்தியாலங்களில் துயரத்தில் உயிரிழந்த மகன்-இலங்கையில் சம்பவம்..!

தாயி இறந்த சில மணித்தியாலங்களில் துயரத்தில் உயிரிழந்த மகன்-இலங்கையில் சம்பவம்..!

தாயின் மரணத்தால் மிகவும் துயரமடைந்து காணப்பட்ட  மகன், தனது தாயார் உயிரிழந்து சில மணித்தியாலங்களில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் இந்துருவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இந்துருவ, அகாடகொட, கல்தரமுல்லையில் வசித்து வந்த 71 வயதுடைய  ஏழு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மகன் 47 வயதான ஒரு பிள்ளையின் தந்தையாவார், இவரின் தாய் கடந்த 22ஆம் திகதி உயிரிழந்தமையினால் அவரது மகன்  மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்திருந்தார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version