Home WORLD NEWS அலை கடலென திரண்ட துருக்கியர்கள் – நகரம் முழுவதும் ‘சுதந்திர பாலஸ்தீனம்’ கோஷம்

அலை கடலென திரண்ட துருக்கியர்கள் – நகரம் முழுவதும் ‘சுதந்திர பாலஸ்தீனம்’ கோஷம்

43
0

புத்தாண்டு தினத்தன்று,  (நேற்று 01)  காசா மக்களுக்காக  பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால், இஸ்தான்புல்லின் சின்னமான கலாட்டா பாலம் ஒற்றுமையின் கடலாக மாறியது.

துருக்கிய மற்றும் பாலஸ்தீனிய கொடிகள் உயரப் பறந்தன. அதே நேரத்தில் “சுதந்திர பாலஸ்தீனம்” என்ற கோஷங்கள் நகரம் முழுவதும் எதிரொலித்தன.

300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய சார்பு மற்றும் இஸ்லாமிய அமைப்புகளை ஒன்றிணைக்கும் கூட்டணியான நேஷனல் வில் பிளாட்ஃபார்ம், பாலத்தை ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் சின்னமாக மாற்றியமைக்கும் வகையில் சக்திவாய்ந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் மகன் பிலால் எர்டோகன், கூட்டத்தைத் திரட்ட மேடையில் ஏறி, காசாவுக்கு அசைக்க முடியாத ஆதரவைக் கோரினார்.

இஸ்ரேலின் அட்டூழியங்களை கடுமையாக விமர்சித்தார். கிளர்ச்சிப் படைகளின் கைகளில் சிரிய ஜனாதிபதி பஷார் அசாத்தின் சமீபத்திய வீழ்ச்சி குறித்தும் அவர் கவனத்தை ஈர்த்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here