ஆட்டுப்பட்டி அருகே உறங்கியவரை வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்கள்; தூத்துக்குடி சாத்தான்குளம் அருகே பரபரப்பு!

சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை பகுதிதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை பகுதியில் வசித்து வருபவர் சண்முகம், இவருடைய மகன் சுடலை இவர் 200க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வைத்து வளர்த்து வருகின்றார். அதன் மூலம் தங்கங்களது வாழ்வாதாரத்தை பார்த்து வரும் நிலையில் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக காலை மற்றும் மாலை நேரத்தில் வயலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

வயலில் இரு தரப்பினர் மோதல்

இந்நிலையில் சுடலை ஆழ்வார் திருநகரில் அருகே உள்ள தேமாங்குளம் வயல்வெளியில் பட்டி வைத்து ஆடுகளை வளர்த்து வரும் நிலையில் செம்மறி ஆடுகளை பராமரிப்பதற்காக மணிகண்டன் என்பவரை வேலைக்காக வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆடுகள் வளர்க்கும் இடத்தில் வைத்து ஆடுகளை பராமரிக்கும் மணிகண்டனுக்கும் தேமாங்குளம் அருகே உள்ள வெள்ளரிக்காயூரணியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை

அந்த தகராறில் இளைஞர் காயமடைந்த நிலையில் அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் இந்நிலையில் மணிகண்டன் இல்லாததால் சுடலை ஆடுகளை வயல்வெளியில் பட்டியில் அடைத்து விட்டு அங்கேயே உறங்கி உள்ளார்.

திருநகரில் உள்ள போலீசாருக்கு தகவல்

காலை நீண்ட நேரம் ஆன நிலையில் சுடலை வெளியே வராததால் அவ்வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தனர் அப்போது சுடலை முகத்தில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்தது, அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஆழ்வார் திருநகரில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனை

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுடலையின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மணிகண்டனுக்கு பதிலாக சுடலை வெட்டி கொலை செய்துள்ளனரா, எனவும் விசாரணையை தொடங்கியுள்ளனர் இச்சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரவில் ஒருவரை வெட்டி படுகொலை செய்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.