உயிரிழந்த கணவரின் சடலத்தை 3 நாட்களாக வீட்டில் வைத்திருந்த மனைவி..! {படங்கள்}

உயிரிழந்த கணவரின் சடலத்தை கடந்த 3 நாட்களாக வீட்டினுள் வைத்திருந்ததாக கூறப்படும் மனைவியை வீட்டின் கதவுகளை உடைத்து மீட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 52 வயதுடைய அத்தனாயக்க முதியன்சேலாகே ஜகத் பண்டார என்ற நபராவார்.

பாணந்துறை எடம்பகொடவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உயிரிழந்த கணவரின், உயிரிழந்த கணவரின் சடலத்தை-உயிரிழந்த கணவரின் சடலத்தை 3 நாட்களாக வீட்டில் வைத்திருந்த மனைவி..! {படங்கள்}-oneindia news

இதனையடுத்து பொலிஸார் அங்கு சென்று சோதனையிட்டபோது உயிரிழந்தவரது மனைவி, வளர்ப்பு நாயுடன் வீட்டின் கதவுகளை பூட்டி உள்ளே இருந்துள்ளார்.

பின்னர் பொலிஸார் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்து சோதித்த போது கட்டிலுக்கு அருகில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த கணவரின், உயிரிழந்த கணவரின் சடலத்தை-உயிரிழந்த கணவரின் சடலத்தை 3 நாட்களாக வீட்டில் வைத்திருந்த மனைவி..! {படங்கள்}-oneindia news

உயிரிழந்தவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவரென பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த கணவரின், உயிரிழந்த கணவரின் சடலத்தை-உயிரிழந்த கணவரின் சடலத்தை 3 நாட்களாக வீட்டில் வைத்திருந்த மனைவி..! {படங்கள்}-oneindia news