கொழும்பில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் – பதறி ஓடிய வாடிக்கையாளர்கள்..!

கொழும்பு ஆர்மர் வீதியில் உள்ள ஹோட்டலுக்குள்  (03) அதிகாலை   நுழைந்த சிலர் வாள்கள் மற்றும் பொல்லுகளால் ஹோட்டலின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், ஊழியர்களையும் காயப்படுத்தியுள்ளனர்.

ஹோட்டலைப் பயன்படுத்துவது தொடர்பாக உரிமையாளருக்கும் குத்தகைதாரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே தாக்குதலுக்கு வழிவகுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவு 12.29 மணியளவில், ஹோட்டலுக்குள் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று நுழைந்த விதம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

அந்த கும்பல் ஹோட்டல் உடைமைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் பீதியுடன் வெளியே செல்வதும்  அந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஆமர்வீதிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.