தகுதியல்லாத பாலியல் பேராசிரியரின் தில்லாலங்கடி!!

கிழக்கின் முன்னணி தமிழ் பல்கலைக்கழகம் ஒன்றில் உயர்பட்டப்படிப்புகள் பீடத்திற்கான பீடாதிபதி நேர்முகத்தேர்வு கடந்த மாதம் (21.07.2023) நடைபெற்றுள்ள நிலையில் குறித்த பதவிக்கு, பதவிக்கு அலையும் தகுதியல்லாத பாலியல் பேராசிரியர் குறித்த பதவியை தமக்குப் பெற்றுத் தர ஆவண செய்யுமாறு ஆயுதக்குழுத் தலைவனின் மட்டக்களப்பு வாவிக்கரை அலுவலகத்தில் தஞ்சமடைந்த சம்பவம் வெளியாகி குறித்த நியமனம் இன்று வரை நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழத்தின் வளர்ச்சியை தடுப்பதில் பதவிக்கு நாக்கை தொங்க விட்டு அலையும் பேராசிரியர் மிகவும் முதன்மையானவர், பதவிக்காக கதிரைகளைத் தேடி அலைவது அல்லது பாலியல் லஞ்சம் பெறுவதே அவரது முழுநேரத் தொழில்.

பல்கலைக்கழகத்தின் நீண்ட கால முயற்சியால் கிடைத்த உயர்பட்டப்படிப்புகள் பீடம், தமிழ் இன பற்று அற்ற பேராசிரியர் கைகளுக்கு செல்லுமாக இருந்தால் குரங்கின் கையில் கிடைத்த பூமாலை போன்று ஆகி விடும் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை.

பொருத்தமான பலர் விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களை ஓரங்கட்டிவிட்டு தமக்கு பதவி பெறுவதற்கு மட்டக்களப்பில் படிக்காத கிழக்கை மீட்கும் முட்டாளிடம், பதவி பெற முயற்சிக்கும் குறுக்கு வழியில் பேராசிரியரான முட்டாள்.

கலைப்பீடத்தில் பீடாதிபதியாக பணியாற்றிய காலத்தில் மாணவிகள் பலரை சித்தியடையச் செய்வதற்கு பாலியல் லஞ்சம் பெற்ற மிகத் துணிச்சலான பேராசிரியர், பாலியல் லஞ்சம் வழங்க மறுத்த மாணவரகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய மிக நல்ல மனிதர்.

குறித்த பல்கலைக்கழகத்தில் உயர்பட்டப்படிப்புகள் பீடத்திற்கான பீடாதிபதியாக தகுதியல்லாத பாலியல் பேராசிரியர் நியமிக்கப் படுவாராக இருந்தால் விரைவில் குறித்த பீடம் இழுத்து மூடப்படும் அபாயத்தை, பல்கலைக்கழக துணை வேந்தர் சிந்திப்பது காலத்தின் கட்டாயம்.

தகுதியல்லாத பாலியல் பேராசிரியரின் தில்லாலங்கடி!! - Dinamani news - தகுதியல்லாத பாலியல்

பல்கலைக்கழக துணை வேந்தர் ஆயுதக்குழுத் தலைவரின் சிபரிசில் தெரிவு செய்யப்பட்டவர், உயர் பட்டப்படிப்புகள் பீடத்திற்கான பீடாதிபதி நேர்முகத்தேர்வு கடந்த மாதம் (21.07.2023) நடைபெற்றிருந்தது.

நேர்முக தேர்வில் பங்கு பற்றிய பேராசிரியரிகளின் புள்ளிகள் அடங்கிய கோவையை பீடாதிபதி ஆயுதக் குழு தலைவரிடம் ஒப்படைத்த போது அச்சந்தர்ப்பத்தில் குறித்த ஆயுதக் குழ தலைவர் அதிர்ச்சி அடைந்ததாக பல்கலைக்கழக துணை வேந்தர் நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார்.

காரணம் என்னவென்றால் நேர்முகத்தேர்வில் பங்கு பற்றியவர்களின் இறுதி இடத்தை பெற்றுள்ளார் ஆயுதக் குழு தலைவரின் சிபாரிசில் சென்ற பேராசிரியர், அதனைத் தொடர்ந்து ஒரு மாதமாக தாமதப் படுத்திய முடிவுகளை நேர்முகத்தேர்வில் தோற்றி இறுதி இடத்திற்கு தெரிவான பேராசிரியரை ஆயுதக் குழு தலைவரின் பெயரில் அறிவிப்பதற்கு பல்கலைக்கழக துணை வேந்தர் ஒப்புதல் அளித்துள்ளமையால் விரைவில் முட்டாள் பேராசிரியர் மிக முக்கிய துறையின் தலைவராக வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேராசிரியராவதற்கு கூட தகுதி இல்லாதவர்களை ஒரு பீடத்தின் தலைவராக தெரிவு செய்து வரலாற்றுத் துரோகம் செய்து விட வேண்டாம் என பல்கலைக்கழக துணை வேந்தரிடம் கல்விச் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தகுதியல்லாத பாலியல் பேராசிரியரின் தில்லாலங்கடி!! - Dinamani news - தகுதியல்லாத பாலியல்

கல்வியை கல்வியலாளர்கள் கையாளட்டும், அரசில் வாதிகளின் தகுதி இல்லாத நியமனங்களை அனுமதிக்காதீர்கள்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முக்கிய பதவிக்கு பிள்ளையானின் தகுதியல்லாத பாலியல் பேராசிரியர்

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு கல்வித் தகுதியல்லாத பாலியல் இலஞ்சம் பெற்ற நபரை ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனும் சந்திரகாந்தன் நியமிக்க முயற்சிப்பதாக தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்,

“கிழக்கு பல்கலை கழகத்திற்கு கற்பித்தல் துறைக்கு அல்லது கல்வி நிர்வாக துறைக்கு பொருத்தமில்லாத அதாவது தகுதி இல்லாத ஒருவரையோ அல்லது ஒரு குடும்பத்தையோ தங்களது அரசியல், அதிகார செல்வாக்கின் நிமிர்த்தம் திணிக்க முற்படுவதாக கற்ற சமூகத்தின் சார்பாக அறிய முடிகிறது.

அவ்வாறு இருப்பின் அது தடுக்கப்பட வேண்டியது. கல்லாதவர்கள் கற்றவர்களுக்கு கற்பிப்பது தான் கல்வி என்றால் கற்றவர்கள் என்னாவது கல்விதான் என்னாவது. கல்வியா? செல்வமா? அரசியலா? என்றால், அரசியல் தான் அரியாசனம் ஏறும் என்றால் எதிர்காலத்தில் உங்களது ஒரு தனி ஆசனம் இல்லாமல் போகும்.

எனவே எம்மால் குறிப்பிட்ட செய்தியை கருத்தில் கொண்டு எமது எதிர்கால கல்வி சமூகம் வளர ஆவனை செய்யுமாறு தயவுடன் கேட்கின்றேன் ” என சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.