தூத்துக்குடியில் அதிர்ச்சி! அமோனியா வாயு கசிவு-ஒருவர் உயிரிழப்பு!

தூத்துக்குடி டேக் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு தாக்கி ஹரிஹரன் என்ற ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக பலி விபத்திற்கு காரணமான டேக் தொழிற்சாலை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.

நகர துணை கண்காணிப்பாளர் கேல்க்கர் சுப்பிரமணியம் தலைமையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.