தலைமை ஆசிரியர் மீது புகார்
தனது மகளுக்கு இரண்டாவது பரிசையும் வழங்கி உள்ளதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டை முன்வைத்து ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். மேலும் தலைமை ஆசிரியரிடம் இது குறித்து கேட்ட பொழுது தன்னையும் தன் மகளையும் இழிவுபடுத்தி மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும் இந்திரா காந்தி தெரிவித்தார்.
மாணவியின் பெற்றோர் கோரிக்கை
ஜாதியின் அடிப்படையில் பரிசு வழங்கியது வேதனை அளித்துள்ளது. தலைமையாசிரியர் நிர்மலா ஆரோக்கிய மேரி மற்றும் ஆசிரியர் சாந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மாணவியின் பெற்றோர் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
விசாரணை
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். அவருடைய செல்போனை தொடர்பு கொள்ள முடியாததால் இது குறித்து விசாரணை முடிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். அரசு பள்ளியில் ஜாதியை காரணம் காட்டி மாணவிக்கு பரிசு வழங்காத சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்