மஸ்கெலியா புரவுன்லோ தோட்ட தொழிலாளர்கள் கவனவீர்ப்பு போராட்டம்..!!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த  200 இற்கும் அதிகமான ஆண் பெண் தொழிலாளர்கள் இன்று (01) காலை 7.30 முதல் 8.30 வரையான ஒரு மணி நேரம் மஸ்கெலியா நோட்டன் பிரதான சாலையில் கவனவீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

நாட்டில் நிலவும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமக்கு உறுதியளித்தபடி நாளாந்த வேதனம் 1700 ரூபாவாகவேனும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தப் போராட்டம் இடம்பெற்றது.