Tag: ஒருவர்

HomeTagsஒருவர்

கிரிக்கட் மட்டையால் தாக்கி ஒருவர் படுகொலை..!

பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருதலாவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கிரிக்கெட் மட்டை மற்றும் ​பொல்லினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் வேம்படி மகளீர் கல்லூரி ஆசிரியர் மயங்கி வீழ்ந்து மரணம்!!

மயங்கி விழுந்த ஆசிரியர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியரான கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது 32) எனும் ஆசிரியரே உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து சிகிச்சைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் அதிரும் துப்பாக்கி வேட்டுக்கள்-இன்றும் ஒருவர் பலி..!

இன்று காலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கி சூடு – வெல்லே சாரங்கவின் உறவினர் டொன் சுஜித் பலி. மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலப்பிட்டிவல சந்திக்கு அருகில் இன்று (21) காலை 7.15 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஹெட்டியாராச்சிகே டொன் சுஜித் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் வெல்லே சாரங்க என்ற ஒழுங்கமைக்கப்பட்ட […]

ரகசிய தகவலில் வவுனியாவிலும் ஒருவர் கைது..!

வவுனியா தம்பனைச்சோலை பகுதியில் 80000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை வவுனியா தலைமைபொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பொலிசார் கைதுசெய்தனர். குறித்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா தலைமை போலீஸ் அதிகாரியின் வவுனியா மது ஒழிப்பு பொலிஸ் பிரிவின் நிலைய பொறுப்பு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் றிஸ்வி  தலைமையிலான பொலிஸ் சார்ஐன்களான கீர்த்தி ரத்தின (48001) , சொய்சா (67436) , டிசாநாயக்க (34831) , பொலிஸ் கொஸ்தாபர்களான குமார […]

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி..!

மட்டக்களப்பு – தன்னாமுனை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் முச்சக்கரவண்டியும், டிப்பர் வாகனமொன்றும் மோதியே விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காத்தான்குடி – சேகுல் பலாஹ் வீதியை சேர்ந்த ரஹீம் என்பவர் உயிரிழந்துள்ளதுள்ளார். விபத்தில் குழந்தை, பெண் உட்பட 4 பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர் இந்நிலையிலேயே விபத்தில் […]

தருமபுரத்தில் இரு துவக்குகளோடு ஒருவர் கைது..! {படங்கள்}

தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறுகல்லாறு பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு இடியன் துப்பாக்கிகளும் மற்றும் மிருக வேட்டைக்கு பயன்படுத்தப்படும் கட்டுத் துவக்கு குழாய்கள் 03 கட்டுத் துவக்குக்கு பயன்படுத்தப்படும் கம்பி மற்றும் ஈயக்குண்டுகள் 12 யானை வெடி 3 வெடிமருந்து என்பனவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் தர்மபுரம் போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக அன்று 14.02.2024 சுற்றிவளைப்பை மேற்கொண்ட தர்மபுரம் போலீசார் சந்தேகநபரைகைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அன்றைய […]

மலையகத்தில் ரயில் மோதி ஒருவர் பலி..!

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அஸ்கிரிய பிரதேசத்தில் ரயிலில் விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 75 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் மற்றுமொரு சோகம்-இன்றும் ஒருவர் பலி..!

முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (14.02.2024) அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளது. தண்ணிமுறிப்பு குளத்தினை அண்மித்த காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்ற குடும்பஸ்தரான ஆறுமுகத்தான் குளத்தினை 48 அகவையுடைய சேர்ந்த துரைராசா ஆனந்தராசா என்பவரே துப்பாக்கி வெடித்து படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். வேட்டைக்கு சென்ற குறித்த நபர் காட்டிற்குள் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் அவருடன் வேட்டைக்கு சென்றவர்களால் எடுத்துவரப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். […]

நிகழ்நிலை சட்டத்தில் முதன் முதலாக ஒருவர் கைது

சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபரை குற்ற விசாரணைத் திணைக்களம் (சிஐடி) கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார். அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் குறித்த சந்தேக நபர் தீங்கிழைக்கும் வகையில் இந்த அவதூறு பரப்புரைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “அவர் சமூக ஊடகங்கள் மூலம் எங்களை அவதூறாகப் பேசினார். கைது செய்யப்பட்ட போது, அவரிடம் ரூபா 4 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதற்காகத்தான் இணையவழி பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இந்த பரப்புரைகள் அரசை […]

வடமராட்சி விபத்தில் ஒருவர் பலி!

கொடிகாமம் கச்சாய் – புலோலி பருத்தித்துறை பிரதான வீதி மாக்கிராய் பகுதியில்  இன்று (11) காலை ஐந்து மணியளவில் நெல்லை உலரவிடுவதற்காக பரவிக் கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள்  மோதி விபத்துக்குள்ளானது. பளையில் இருந்து கொடிகாமம் ஊடாக பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிரே நெல் பரவிக் கொண்டிருந்தவர் மீது மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். காலையில் அதிக பனி மூட்டம் இருள் காரணமாக வீதியில் நெல் பரவியவரை தெரியவில்லை அதனாலேயே […]

துப்பாக்கி சூடு ஒருவர் பலி

நீர்கொழும்பு – கல்கந்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது.

பிக்கு கொலை – கைக்குண்டுடன் ஒருவர் கைது

மல்வத்து – ஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு / வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் இவர் கைது செய்யப்ப்டுள்ளார். மேலும் சந்தேகநபரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

RECENT NEWS

இன்றைய ராசிபலன் : 05 அக்டோபர் 2024 – Daily Horoscope

Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (அக்டோபர் 5, 2024 சனிக் கிழமை) இன்று சந்திரன் பகவான் துலாம் ராசியில் சுவாதி, விசாகம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று மரண யோகம் கூடிய...