Tag: யாழ்

HomeTagsயாழ்

ஓயில் ஏற்றிவந்த கொள்கலன் விபத்து!! நடந்தது என்ன?? – படங்கள் –

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டு சரிந்து விழுந்தன. குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து சில மணிநேரம் முற்றாக பாதிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட இ.போ.ச. பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட எரிபொருள் தாங்கி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி எரிபொருள் வீதியில் கொட்டியது. சாதுரியமாக செயற்பட்ட இ.போ.ச. சாரதி பேருந்தை ஒரமாக நிறுத்திவிட்டார். இதன்போது வீதியில் வந்த டிப்பர் வாகனம் கொட்டியிருந்த […]

இன்னும் ஏழு மாதங்களில் ஜனாதிபதி தேர்தல்

இன்னும் ஏழு மாதங்களில் இந்த நாட்டில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று இடம்பெற உள்ளது. இந்த நாட்டை ஒன்றிணைத்து அனைவரும் ஒரே குடும்பமாக வாழ்வதற்கான வேலைத்திட்டத்திற்காக ரணில் விக்ரமசிங்கவை இந்த நாட்டின் கட்சி சார்பற்ற ஜனாதிபதி வேட்பாளராக நியமித்து அந்த தேர்தலில் வெற்றிபெற்று நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக செயற்பட வேண்டும் என்பதை கூறுவதற்காகவே நான் இன்று யாழ்ப்பாணத்திற்கு வந்தேன் என ரவி கருணாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரவி கருணாநாயக்க இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், […]

மிருசுவில் பகுதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் மோதி விபத்து

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளானது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன. விபத்து காரணமாக எரிபொருள் தாங்கியில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் கசிந்து காணப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டக்காரர்களின் உடலில் நீர் சத்து குறைகிறது – வைத்தியர் எச்சரிக்கை

இந்திய மீனவர்களின் அத்துமிறலைக் கண்டித்து உணவு தவிப்பு போராட்டத்தில் ஈடுபடும் நான்கு பேரின் உடலில் நீரின் அளவு குறைவடைந்து செல்வதாக பரிசோதித்த வைத்தியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாண குடாப்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை நிறுத்துமாறு கோரி கடந்த செவ்வாய்க்கிழமை நான்கு மீனவர்கள் யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திற்குச் செல்லும் வாயிலில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இன்றையதினம் வியாழக்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்களின் உடல் சோர்வடைந்த நிலையில் குறித்த இடத்துக்கு வைத்தியர் வரவழைக்கப்பட்டு […]

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று மாலை தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க குறித்த விடயத்தை தெரிவித்தார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்டு வருகிறார். இன்றைய கூட்டத்தில் இதுவரை காலமும் கட்சியின் ஆதரவாளர்களாக உறுப்பினர்களாக இருந்த பலரும் […]

வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் – அமைச்சர் டக்ளஸ் –

வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னெடுத்தவரும் உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அவர்களுக்கு எதராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலும் நாட்டில் நிலவும் சில பிரச்சினைகள் தொடர்பிலும் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் – இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் எல்லைத் தாண்டியதும், அத்துமீறியதும், தடைசெய்யப்பட்ட […]

” தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை” எனும் செய்தியுடன் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு..

” தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை” எனும் செய்தியுடன் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தர வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் கோரியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வெள்ளிக்கிழமை ரணில் விக்கிரமசிங்க வருகை தரவுள்ள நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் குரலற்றவர்களின் குரல் அமைப்பாளர் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி யாழில். கடந்த 33 வருட காலமாக இராணுவ […]

இரண்டாவது இந்து சர்வதேச மாநாடு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்! – படங்கள்-

இந்துக் கற்கைகள் பாரம்பரியமும் பண்பாட்டு எனும் தொனிப்பொருளில் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் மாநாடு தலைவர் ச பத்மநாபன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா சகிதம் விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். விருந்தினர்களின் மக்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து நந்திக் கொடி ஏற்றும் வைபவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. வரவேற்பு உரையை […]

புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை வரவேற்பதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகர் அன்ரேவ் ட்ராவெள்ளர் (Andrew Traveller), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை இன்று (21.03.2024) சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இலங்கைக்கான நியூசிலாந்து துணை உயர்ஸ்தானிகர் கௌரவ ஆளுநரிடம் கேட்டறிந்துக்கொண்டார். மாகாணத்தின் கல்வி, பொருளாதார, வாழ்வியல்நிலை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி […]

போராட்ட களத்தில் பரபரப்பு!! ஒருவரது நிலை கவலைக்கிடம் – போராட்டகாரர்கள் குமுறல்!

இந்திய மீன்பிடியாளர்களது எல்லைதாண்டிய அத்துமீறும் செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் தமக்கு ஆதரவு தெரிவித்து எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரோ அமைச்சரோ வரவில்லை என உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19 ஆம் திகதி காலைமுதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் […]

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் 31 மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 31பேர் நேற்றிரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் 3 படகுகளில் வந்து நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 25 மீனவர்களும், 2 படகுகளில் வந்து மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ஆறு மீனவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை – மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். பின்னர் யாழ்ப்பாண மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர் மீனவர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை […]

வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரிப்பு

அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தென்னைப்பயிரில் வெள்ளை ஈயின் தாக்கம் அதிகரித்துள்ளது என தென்னை பயிர்செய்கை சபையின் முகாமையாளர் வைகுந்தன் தெரிவித்தார். வெள்ளை ஈயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் தென்னை பயிர்செய்கை சபையின் முகாமையாளர் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அதிகரித்து வரும் வெப்ப நிலையினால் தென்னை பயிரில் காணப்படும் ஓலைகளில் வெள்ளை ஈயின் தாக்கம் வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்துள்ளது இதனை கட்டுப்படுத்துவதற்கு வேப்பெண்ணெய் சலவைத்தூள் உள்ளிட்டவற்றை பயிர்களுக்கு […]

RECENT NEWS

இன்றைய ராசிபலன் : 05 அக்டோபர் 2024 – Daily Horoscope

Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (அக்டோபர் 5, 2024 சனிக் கிழமை) இன்று சந்திரன் பகவான் துலாம் ராசியில் சுவாதி, விசாகம் நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று மரண யோகம் கூடிய...